யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று‘
'யாரைவிடவும் உன் மேல் காதல் அதிகம் என்றேன் நான்
யாரை விடவும் ?யாரை விடவும் ?என்றால் அவள் '
புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே?
Wednesday, October 13, 2010
Friday, October 1, 2010
கரிய நிறத்து ஒரு தாகம்
வேகமாய்
வேகமாய்
ஓடிகொண்டிருக்கிறேன்.
கரிய நிறத்தொரு
வனத்தினுள்
கருமையாய் நானும்
கருமையின்
அடர்த்தி வித்தியாசத்தால்
உணரும்
வெற்றிடமும்
அதனுள்
நிறைந்த
கரிய நிறத்து
பருப்பொருள் களும்
கருமையாய்ச்
செடிகளும்
புதர்களும்
கொடிகளும்
கரிய நிறத்தின்
வேர்கள்
மற்றொரு கரிய நிறத்தின்
மரக்கால்கள்
நிற்கும் வனம்
கருமையின்
வெவேறு ஒளி
வித்தியாசங்களில்
கிளைகளும்
இலைகளும்
பூக்களும் கூட
பிரபஞ்சத்தின்
மையப்புள்ளி
ஆதி அடர்த்தியான
கருமை
எல்லாம் உள் இழுக்கும்
உருஞ்சிக்கொள்ளும்
கருமை
எல்லாம்
தீர்ந்து
காலமென்ற
பிரக்ஞை
அற்ற
மையபுள்ளியின்
கருமை
மீண்டும்
முதல்
ஒளி தோன்றும்
யோனிக் கீறலின்
கருமை
மீஎண்டும்
மீண்டும்
பிரபஞ்சம்
தோன்றி மறையும்
கருமை
காலத்தின்
நீட்சிபோல
ஆதி வனத்தின்
கரிய வழித்தடத்தில்
கடந்து
போய்க்கொண்டிருக்கிறேன்
கருமையாய்
எதை நோக்கி
கருமையையா?
வெறுமை என்ற
கருமையை
நோக்கியே
உடலின்
நீர் முழுதும்
வியர்வையாய்
கரிய மனிதுளிகலென
உருண்டு இறங்கும்
உள் நாக்கு
வரை
உலர்ந்து
போகும்
தாகம்
தகிக்கின்ற
தாகம்
கரிய
திரவமாய்
நீர்
கண்டால்
அள்ளிப் பருக
தவிக்கும்
தாகம்
தீராத
கருமை
போல
தீராத
தாகம்
அதி
மையத்தின்
முதர்ச்சலனம்
உண்டாக்கிய
தாகம்
பருகித்தீராத
தாகம்
பருகும்
பொருளும்
என்னைப்
பருகிய
பின்னும்
கனவுக்குள்
உதிக்கும் தாகம்
கனவு கலையும் மட்டும்
தீர்வதில்லை!
வேகமாய்
ஓடிகொண்டிருக்கிறேன்.
கரிய நிறத்தொரு
வனத்தினுள்
கருமையாய் நானும்
கருமையின்
அடர்த்தி வித்தியாசத்தால்
உணரும்
வெற்றிடமும்
அதனுள்
நிறைந்த
கரிய நிறத்து
பருப்பொருள் களும்
கருமையாய்ச்
செடிகளும்
புதர்களும்
கொடிகளும்
கரிய நிறத்தின்
வேர்கள்
மற்றொரு கரிய நிறத்தின்
மரக்கால்கள்
நிற்கும் வனம்
கருமையின்
வெவேறு ஒளி
வித்தியாசங்களில்
கிளைகளும்
இலைகளும்
பூக்களும் கூட
பிரபஞ்சத்தின்
மையப்புள்ளி
ஆதி அடர்த்தியான
கருமை
எல்லாம் உள் இழுக்கும்
உருஞ்சிக்கொள்ளும்
கருமை
எல்லாம்
தீர்ந்து
காலமென்ற
பிரக்ஞை
அற்ற
மையபுள்ளியின்
கருமை
மீண்டும்
முதல்
ஒளி தோன்றும்
யோனிக் கீறலின்
கருமை
மீஎண்டும்
மீண்டும்
பிரபஞ்சம்
தோன்றி மறையும்
கருமை
காலத்தின்
நீட்சிபோல
ஆதி வனத்தின்
கரிய வழித்தடத்தில்
கடந்து
போய்க்கொண்டிருக்கிறேன்
கருமையாய்
எதை நோக்கி
கருமையையா?
வெறுமை என்ற
கருமையை
நோக்கியே
உடலின்
நீர் முழுதும்
வியர்வையாய்
கரிய மனிதுளிகலென
உருண்டு இறங்கும்
உள் நாக்கு
வரை
உலர்ந்து
போகும்
தாகம்
தகிக்கின்ற
தாகம்
கரிய
திரவமாய்
நீர்
கண்டால்
அள்ளிப் பருக
தவிக்கும்
தாகம்
தீராத
கருமை
போல
தீராத
தாகம்
அதி
மையத்தின்
முதர்ச்சலனம்
உண்டாக்கிய
தாகம்
பருகித்தீராத
தாகம்
பருகும்
பொருளும்
என்னைப்
பருகிய
பின்னும்
கனவுக்குள்
உதிக்கும் தாகம்
கனவு கலையும் மட்டும்
தீர்வதில்லை!
Friday, September 10, 2010
முல்லைப் பூவென........
முல்லைப் பூவென நினைத்தேனடி உன்னை
என் முகம் கீறிப் போனதென்ன?
காதல் செய்ததெந்தன் பிழையோ? - உன்னைக்
காணத் தவித்ததெந்தன் பிழையோ?
உணர்வில் நிலைத்தவிட்ட பின்னே - எந்தன்
உயிரில் கலந்துவிட்ட பின்னே
நீங்கிச் செல்வதென்பது சரியோ? - இதுகண்
உறக்கத்தில் வந்த கனவோ?
நின் செல்லக் கரம்பிடித்துக் கொண்டு - நான்
செல்வேன் தூர தூரமென்று
வண்ணக் கனவு கண்டிருந்தேன் - நான்
காத்திருந்தேனடி பெண்ணே!
வண்ண ஓவியத்தில் நீர் விழுந்தே எந்தன்
கனவு கலைந்தது கண்டேன் !
வானம் தீரும் வரையும் என் - வாழ்வு
தீரும் வரையும் உனக்காக
காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று - நான்
காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று.
Subscribe to:
Posts (Atom)