Tuesday, December 22, 2009

கவிதை 3: பக்கத்தில் நீ...

நிலவில்லா இரவு
ஒரேஒரு விண்மீன்
சலசலக்கும் ஓடை
பக்கத்தில் நீ.

தூரத்து விளக்கு
கரைதீண்டும் அலை
ஒற்றைப் படகு
பக்கத்தில் நீ.

அதிகாலை வெளிச்சம்
அணில்பேசும் சத்தம்
நம்வீட்டுக் கொல்லை
பக்கத்தில் நீ.

முற்றத்துக் கோலம்
முல்லைப்பூப் பந்தல்
மேகத்தின் முதற்துளி
பக்கத்தில் நீ.


எதிர்பார்த்த முத்தம்
எதிர்பாராக் கண்ணீர்
அரவணைக்க நான்
தோள்சாய நீ!

2 comments: