கூரிய வாள் ஒன்று உண்டு
என்னிடம்
அதை பத்திரமாய் வைத்திருக்கின்றேன்.
என் இதயத் தசைக்கோளங்களுக்குள்
சொருகி
ஒரு புறம் குத்தி
மறு புறம் வெளிவந்திருக்கும்
கூர் முனையில்
சொட்டிக் கொண்டிருக்கும்
தட் தட் என
உதிரத் துளிகள்
தேர்ந்த பிரபஞ்ச நடனதினுக்கொரு
தாளம் போல.