Friday, August 27, 2010

யாசகன்

 யாசகன்
என் யாசகம் எல்லாம்
உன்னிடம் மட்டும்
தான்!

என்னை கண்டவுடன்
நீ உதிர்க்கும்
ஒற்றை புன்னகை!

உன்னை காணும்தொரும்
என் விழி நனைக்கும்
கண்ணீர் துளி!

உன் விரல் பிடித்த நடை!
உன் தோள் சாய்ந்த உறக்கம்!

உன்னோடு உரையாடியும்
தீராத வார்த்தைகள்!
பரிமாறித் தீராத
அன்பு !


என் மரணத்திற்காய் 
நீ விடும் கண்ணீர்!

மரணிக்கும் பொது
நான் காண
உன் முகம் !

இவை என் யாசகங்கள்!
யாசகம் ஒரு தவம்!

நான் யாசித்து இருப்பதற்காகவே
யாசிக்கிறேன்!
தரப்படும் என்பதற்காக அல்ல!

நான்
யாசகன்