Thursday, January 7, 2010

குருவே! உன்னைச் சரணடைந்தேன்.....

இது ஒரு சரணாகதம்.....

உன் திருவடியைத் தேடி வருகின்றேன். பிறந்த ஒளி இயல்பாய் எப்பக்கமும் ஓடுதல் போல. கற்றில்லாது அடைக்கப்பட்ட வெற்றிடம் பட்டேன்ற திறக்கப்படும் போது உள்ளே சீரினுழையும் காற்றைப்போல். பள்ளத்தை நோக்கி விரைந்து செல்லும் நதியைப்போல. மலை முகட்டை அடைந்த நதி வெள்ளம் அடிவாரம் நோக்கி விழுகின்ற அருவி போல. உன் திருவடி நோக்கி விழுந்து வழிகின்றேன் நான் என்ற அகம் திறந்து.

நான் நல்லவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், தீயவன் என்ற இறுமாப்பு வேசங்களைக் களைந்து விட்டு. நான் எதுவாக இருக்கிறேனோ அதுவாகவே வருகின்றேன் உன் திருவடி சேர. ஏனெனில் அந்த வேசங்களைக் கடந்து உண்மையான எனக்குள் நுழைய வலியவன் நீ.பசித்தப் பிள்ளை தேடும் தாய் என நீ. உனக்கு முன்னால் வேசங்கள் பருதி கண்ட பனி.

நான் எனக்காய் இட்ட வேசங்கள், உலகனிக்காக இட்ட வேசங்கள் எல்லாம் களைந்து வருகின்றேன். நான் என ஆன என் மனம் உன் திருவடியில் விழுந்து வழிகிறது. பொய்யான மாயா பூச்சுகள் இல்லை, அறுப்பட்ட சதை துண்டம் போல் என்னை இழந்து அதுவாய் விழுகிறது மனம் உன் பதங்களில்.

அதன் கள்ளத்தனங்களோடு, திரிபுகளோடு, அச்சங்களோடு , இச்சைகளோடு உன் திருவடியினை தழுவுகின்றது. இன்னும் இன்னும் என்ற ஆசைகளோடு, ஒவ்வொரு ஆசையும் நீ எனக்காய் ஆக்கி தந்த பின்னும், இன்னும் இன்னும் என ஊரும் வற்றாத மனற்கேனியின் நீர் போல உதிக்கும் பேராசைகளோடு வருகின்றது. அது விழுந்து வழிகையில் , நிணமும், சலமும், கழிவுமாக வழிந்து உன்திருவடியில் படுகின்றன. ஆயினும் உன் சேவடி, நீர் ஒட்டாத தாமரை இலை என என் நிணமும்,கழிவுமான மனம் ஒட்டாமல் மணம் கொண்ட மலர் போல மலர்கின்றது ஒவ்வொரு நொடியும். அந்த நின மனம் வழிந்தது உன் திருவடிக்கு மலர்கள் தழுவுதல் எனத் தோன்றுமோ?

உன் திருவடியின் ஒவ்வொரு அசைவும், இந்த பிரபஞ்சத்தின் முதல் அசைவையே எனக்கு நினைவுறுத்தும். இந்த நொடியில் நீ என் ஸ்தூல உடலால் தீண்ட முடியாத தூரத்தில் இருக்கிறாய். என் மனம் உன்னை நோக்கி வந்ததை, உன்னோடு தொடர்பு கொண்டதை நீ அறிந்திருப்பாய். ஏனென்றால், உன் மனம், நீ தான் பௌதீகம் அளந்தறியும் இந்த தூரங்களைக் கடந்து வந்து என் மனதை இயக்கி உனக்குள் வழியச் செய்கிறாய். பொறு! உன் மனம் எங்கோ என் உடலால் தொட இயலாத தூரத்தில் இருக்கின்றதா ? இல்லை. நான் உன் மனதின் உள்தான் இருக்கிறேன்.

உன்னிடம் யாசிக்க என்னிடம் எத்தனையோ ஆசைகள் உண்டு. அவற்றை பூர்த்தியும் நீ செய்வாய். செய்த பின்னும் குறைவாக கேட்டதாக தோன்றும் எனக்கு. இல்லையன்றால், புதிது புதிதாய் ஆசைகள் பிறக்கும். நீ எனக்கு என்ன வேண்டும் என்று கேட்கின்றாய். என்னை விட உனக்குத் தெரியும் எனக்கு எது சரியென்று.

தாயிடம் கூட பசியென்று சொல்ல வேண்டும். நீ தாயினும் சிறந்த தயாவாணன். நீ அறிவாய் அனைத்தும்.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹா

குரு சாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா !

6 comments:

  1. Really i can feel and i can imagine thy holy foot.i have no word to comment to this post.
    Go ahead suzhiyam.

    ReplyDelete
  2. U are blessed with a beautiful thirst... I pray that you enjoy the feel of your thirst being quenched and show everyone the way to find their thirst in life and the way to quench it gracefully..

    ReplyDelete
  3. Your words really touched my inner consciousness... Hats Off!!!

    ReplyDelete
  4. ஒரு மகானை போன்ற எண்ண ஓட்டம்

    ReplyDelete
  5. குரு சாட்சாத் பரப்பிரம்மா
    புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
    பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
    http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

    ReplyDelete