Friday, July 23, 2010

எதை எழுதுவேன் நான்!

எழுது எழுது
என்கிறாய்
என்ன எழுதுவேன்
நான்.

பிறந்த குழந்தையின்
மூடிய கரங்களுக்குள்
விரியும் பிரபஞ்ச வரிகள்!i

இருதுண்டாய் வானம்
கிழித்து மேகங்கள்
இடும் மின்னல் வரிகள்!

அடிவானம் கடலோடு
முத்தமிட்டு விளையாடும்
தொலைதூர ஒற்றை வரி!

கரையோடு மோதுமலை
எழுதி எழுதி அழிக்கும்
வெண் நுரை வரிகள்!

பாலருந்தும் மழலை
வாயோரம் ஒழுகிவரும்
அமுதப் பால் வரிகள்!

நெடுநாளாய்க் காணாது
கண்ட போது அன்னை
சிந்தும் கண்ணீர் வரிகள்!

இவை எழுத என்னிடம்
மொழிகள் இல்லை
எதை எழுதுவேன்
நான்!

6 comments:

  1. ethai ezhuthuven naan endru koorivittu....anaithaiyum athey kaviyil puthaithu vitteerey........
    um pulamaiku adiyen thalaivanankukiren....
    ---Mayilvaganan

    ReplyDelete
  2. மொழியால் வர்னிக்க முடியாத வரிகளை உங்கள் வரிகள் என் கண் முன்னே விரித்து காட்டிவிட்டன.

    ReplyDelete
  3. மிக்க நன்றி மயில், அன்னபூர்ணா

    ReplyDelete
  4. மிக்க நன்றி முனியாண்டி

    ReplyDelete
  5. i've read ur verses right from i known u ... hmm still maintaining the talent ... masha allah ... may the almighty bless u with this forver ... take care

    ReplyDelete