Monday, June 27, 2011

ஒன்றே

ஒரு விதை.
ஒரு மண்.

மண் தோன்றிய போதே
விதை இருந்ததா?
மண் தோன்றிய பிறகு
விதை விழுந்ததா?

விதை முளைத்து
விதைகளாய்ப் பிறந்தன
மண் எங்கும்
விதை விதை

மண் வேறு விதை வேறா?
இங்கு விதையே மண்
மண்ணே விதை!

2 comments:

  1. சுவ, இது எனக்கு உங்களுடைய 'கேள்வி' கவிதையை நினைவு படுத்துகிறது. விதை கேள்வியாகவும், மண் மனமாகவும் உருவகமாகிறது. நம் கேள்விகளே நம் மனதை உருவாக்குகிறதா அல்லது நம் மனமே கிளைத்து கேள்விகளாகிறதா? கேள்வியும், மனமும் சேர்ந்தே உருவாகிறதா? இல்லை கேள்வியும் மனமுமே ஒன்றுதானோ என்கிற சிந்தனை அருமை. என்ன இருந்தாலும் ஜெ மோ வின் மனதைத் தொடும் வரிகளை எழுதிவிட்டீர்களல்லவா?? தொடர்ந்து கவிதைகளை முயற்சிக்கலாம்.

    பிரகாஷ்

    ReplyDelete
  2. அது 'கேள்வி' கவிதை இல்லை.. 'விடைகள் இல்லாதவை'

    மன்னிக்கவும், ப்ரகாஷ்

    ReplyDelete