Wednesday, June 10, 2009

****அஜிஷுக்கு நானும் Fan*******

உங்களில் பல பேருக்கு அஜீஷைப் பற்றி தெரிந்திருக்கும். Airtel Super Singer பட்டத்தை வென்றவர்தான்.

இசையை பொறுத்தவரை நான் ஒரு அறிவிலி தான், இருப்பினும் இசை கேட்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. என் மனதுக்கு பிடித்தவை என்ற வகையில் மட்டுமே பின் வருவனவற்றை குறிப்பிடுகின்றேன். இசை தெரியாதவனாக இருந்தாலும் இசை தானாய் எனக்குள் ஏற்படுத்திய மன எழுட்சிகளை கூற விரும்புகிறேன். இவை விமர்சனம் அல்ல, எனக்கு பிடித்தவை அவ்வளவே.

நான் சென்னையில் நண்பர்களுடன் தங்கியுள்ளேன். எங்கள் அறையில் தொலைக்காட்சி இல்லை. நான் விஜய் டிவியின் ரசிகன் என்று சொல்லலாம். இதற்கு முன்னர் வந்த Airtel Super Singer மற்றும் Airtel Super Singer ஜூனியர் இரண்டையும் முழுவதும் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த முறை சென்னையில் இருப்பதால் என்னால் பார்க்க இயலவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஊருக்குச் செல்லும்போது பார்த்திருக்கிறேன். தொடர்ந்து நிலவரங்களை என் தாயிடமிருந்து மொபைல் வழியாகத் அறிந்து கொண்டிருந்தேன்.

சிலநேரம் ஒரு நாளின் முழு நிகழ்ட்சியையே மொபைல் வழியாகவே கேட்டதுண்டு. அவ்வாறு நான் கேட்டவரையில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் அஜீஸ். பிரசன்னாவின் உற்சாகம் யாரையும் தொற்றிகொள்ளும் தன்மையது. ரேணுவின் குரலில் உள்ள குழைவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் தந்தை ரேணுவின் மிகத்தீவிரமான ரசிகர் ஆகிவிட்டார். ராகினி ஸ்ரீ என் தாயின் விருப்பதுக்குரியவர். என் தங்கையின் விருப்புமான பாடகர் அஜீஸ் தான்.

அதிலும் அஜீஷின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Dedication Round இல் அஜீஸ் பாடிய 'உயிரும் நீயே' மற்றும் Unplugged round இல் 'ஸ்டீபன் தேவசி' இன் பியானோவுடன் பாடிய 'தொடத் தொட மலர்ந்ததென்ன' இரண்டும் என்னை அவரை நோக்கி வசிகரித்தன.


'உனக்கென்ன மேல நின்றால் பாடல் கெட்ட பொழுத எனக்குள் எழுந்த மன எழுச்சிகளை பற்றி சொல்லவேண்டுமென்றால் நானும் இசைக் கலைஞனாக இருந்தால் மட்டுமே கூற இயலும். 'பாட்டும் நானே' பாடிய பொது சுதா ரகுநாதனே 'பாட்டும் நீயே பாவமும் நீயே' என்றே பாராட்டிவிட்டாரே அதற்கு மேல் என்ன சொல்ல முடியும். என் சிற்றறிவுக்கு எட்டியவரை அந்த பாடல் மிகக் கடினமான ஒன்று.

இறுதி சுற்று நிகழ்ச்சி முழுவதையும் கைபேசி முழமாகவே கேட்டேன். இறுதி சுற்றில் பாடிய போட்டியாளர்கள் மூவருமே மிகச்சிறந்தவர்கள் என்பதில் ஐயம் இல்லை. ரேனு பாடிய இரண்டு பாடல்களுமே மிக அழகாக இருந்தன. ரவி பாடிய 'கல்லை மட்டும் கண்டால் ' மிகவும் பிடித்திருந்தது.

அஜீஷைப் பற்றி சொல்லவே வேண்டாம் 'சங்கீத ஜாதிமுல்லை' பாடிய போதே அவர்தான் வெற்றி பெறுவார் என்ற எண்ணம் வலுக்க தொடங்கிவிட்டது. அவருக்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை . நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அவருக்காக.


மனமார்ந்த வாழ்த்துக்கள் அஜீஸ் !!!!

No comments:

Post a Comment