Monday, June 6, 2011

மன்னிப்பு!

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

உன்னால்
தவறுகளை
மறக்கமுடியும்!

ஆறு
ஓடி ஓடி
கடலோடு
சேர்வது
போல்

நீ ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உணர்வுகள் உன் நீர்க்கால்கள்.

நான் உதிர்க்கும்
கசடுகள்
பாரமாய் விழும்
ஒவ்வொருமுறையும்
அதைக் கடத்திவிட்டு
மீண்டும் மீண்டும்
உன் பூரணத்தூய்மையோடு
என்னைச் சந்திக்க
உன்னால் முடிகிறது!

நீ கலங்கமற்று இருக்கிறாய்!

எதையோ கேட்டு
அழுது
உறங்கிய குழந்தை
விடியும் போது
நம்
கழுத்து கட்டி
கிடக்குமே
அது போல்!


ஒற்றை
புன்னகை கீற்றைச் சுமந்து கொண்டு

இந்த பிரபஞ்ச
முழுமையையும்
எல்லா மானுடப் பிழைகளையும்
மன்னிப்பாய்  நீ!

ஆகையினால்,

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

என்னுடையவை ?


தேடி
இடம் பார்த்து
இருதயத்தில்
குரூரமாய்
மிகக்
குரூரமாய்
ஆழக் 
குத்தி விட்டு
பின்
சரி பார்ப்பது!



1 comment:

  1. எதையோ கேட்டு
    அழுது
    உறங்கிய குழந்தை
    விடியும் போது
    நம்
    கழுத்து கட்டி
    கிடக்குமே
    அது போல்!
    எதைகேட்டுஎன்ற வரிகள் என்மனதை தொடுகிறது மொத்தத்தில் கவிதை மிகவும் அருமை ;

    ReplyDelete