Sunday, June 26, 2011

நடை

விழுந்து
எழுந்து
நடைபழகத்தான்
ஆசை எனக்கு!

முன்னின்று எனை நோக்கி
கைகொட்டி வாவென்று அழைக்குமுன் 
ஒவ்வொரு முழுமையான எட்டுக்கும்
இரண்டு மூன்று எட்டுகள் வேண்டும் எனக்கு!

பின் நகராதது போல் பின் நகருவாய்.
ஒரு எட்டுபோல் அரை எட்டுகளும் வைக்கத் தெரியும் உனக்கு
எதை எப்போது செய்கிறாய் என்பது தெரிவதில்லை.
அவை என்னை மேலும்
முன் நகர்த்துவதற்கான
உன் யுத்திகள்!

சிலர்
என் பக்கங்களில் நின்று
விரல் பிடிக்கச் சொல்கிறார்கள்
பிடிக்காது போனால்
நீ என்னை ஈர்த்து கொண்டதாக அங்கலாய்கிறார்கள்

நான் தேர்ந்து கொண்டபின்
உன்னை நோக்கி நடக்கிறேன்

அவர்கள் அறிவதில்லை
நான் நடக்க விரும்புவது
எனக்கான நடையை!

சிலர்
என் பாதைகளை
முடிவு செய்ய முயற்சிக்கிறார்கள்.

இலக்கு என்னவென்று
தெரிந்தால் அல்லவா
பாதையை முடிவு செய்வது!

ஒன்றை நம்புவது
தெரிந்து கொண்டதாகாதே?

1 comment: