Thursday, July 21, 2011

துணை


இருட்டு பழகி
சாம்பல் பூத்திருந்த போது 
கரிய திரை கிழித்து
வாசல் வழி 
இருண்ட அறைக்குள்
அடர்ந்த நிறத்தொரு பூனை
தலை நுழைத்து
பின் உடல் நுழைத்தது 
இருளைத் தற்காலிகமாய் வெளியேற்றி

திரை மீண்ட போது 
பச்சை நிறத்து இரு 
ஒளிப்புள்ளிகள் வெளியில்!

No comments:

Post a Comment