Saturday, June 20, 2009

மத்தகம் - படித்ததில் பிடித்தது

ஜெயமோகன்,

நலமா?
ஆஸ்திரேலியப் பயணம் நல்ல விதமாக இருக்குமென்று நினைக்கிறேன். மத்தகம் படித்துவிட்டேன். முடிவு என் கண்களை கலங்கச் செய்து விட்டது. அந்த உணர்வுகளை முழுதாய் வடிக்க எனக்கு வார்த்தைகள் சிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தன் கால்களைத் தூக்கி பரமனை தன் மேல் ஏற அனுமதிக்கும் போது கேசவனின் மன நிலை என்னவாக இருந்திருக்குமோ அந்த நிலை நமக்குள்ளும் ஒருநொடி உருவாகி நம்மையும் தாக்கத்தான் செய்கிறது.

யானை மிகவும் பலம் பொருந்திய விலங்கு, இருந்தும் அவை மனிதருக்குக் கட்டுப்பட்டு இயங்கும் தன்மை எனக்கு மிகுந்த வியப்பைத் தரும். அனால் அவை தாங்கள் விரும்பினால் மட்டுமே மனிதருக்குக் கட்டுப்படுகின்றன. ஆனால் மனிதன் கொண்டியங்கும் குணமும் இயல்பும் பல நேரம் விசித்திரமானது. அந்த குரூரம் , கொடுமை அந்த யானைப் பாகன் வழியாக படம் பிடித்துக் கட்டப்பட்டுள்ளது.

விலங்குகள் எப்பொழுதும் தூய்மையானவை. தங்கள் போக்கிலேயே வாழ்கின்றன. அவை மற்ற விலங்குகளை துன்புறுத்துவதில்லை. உணவுக்காகவோ, உடலத் தேவைக்காகவோ அல்லது தங்களைப் பாது காத்துக் கொள்ளவோ மட்டுமே தாக்குகின்றன(விதிவிலக்கு இருக்கலாம்). மனிதன் மட்டுமே மற்றவர்களை எதோ ஒரு விதத்தில் தாக்கிக் கொண்டிருப்பதின் மூலமே தான் இருப்பதை நிலை நிறுத்திக்கொள்ள விழைகிறான்.

யானை நடந்து வரும் தோரனையை தாங்கள் விவரித்திருந்த விதம் அந்த காட்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்கு என்னையும் அழைத்து சென்று விட்டது. திருவட்டாரில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கேக் கோட்டை வரைக்கும் செல்லும் பாதை மிக அழகைப் படம் பிடித்து காட்டப்பட்டு இருந்தது .

நான் சில மாத காலங்கள் திருவனந்தபுரத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். அக்காலங்களில் நான் நாகர்கோயில் - திருநெல்வேலி வழியாகத்தான் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று வருவது வழக்கம். அப்போதெல்லாம் குழித்துரையும், கழியக்காவிளை வழியாகவும் தான் பயணம் செய்தாக வேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு யானைப் பாகனாக அதே வழித்தடத்தில் பயணித்தது போல் இருந்தது.

நாம் புழங்கிய இடம் அல்லது கடந்து சென்ற இடங்கள் கதைக்களமாய் அமைந்து இருக்கும் படைப்புகளை படிக்கும் பொழுது அந்த அனுபவம் அந்தப் படைப்பை உள்வாங்கிக் கொள்ள மேலும் ஒரு ஈர்ப்பாக அமைந்து விடுகிறதோ? இதே அனுபவம் 'உடையார்' இல் தஞ்சை பெரிய கோயில் படித்து போதும் அமைந்ததுண்டு.

தவறு செய்தல் மனித இயல்பு. நான் இங்கு குறிப்பிட்டவற்றில் தவறுகள் இருக்கலாம், தவறு செய்தல்தான் ஒன்றைச் சரியாகச் செய்வதற்கு வாய்ப்பாய் அமைகிறது. எனினும் என் தவறுகளைப் பொருத்து ஆள்க. (சுட்டிக் காட்டபடும் பொழுது கண்டிப்பாக திருத்திக் கொள்ளவேன்).

நன்றி,
தங்கள் வாசகன்,
சுந்தரவடிவேலன்.

அன்புள்ள சுந்தரவடிவேலன்

நலம்தானே? மத்தகம் குறித்த உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். அந்தக்கதை மத்தகம் குறித்தது. உயர்ந்த- சிம்மாசனம் போன்ற தலை. அதற்கு மத்தகம் என்ற் பெயர். மத்து + அகம். மதத்தை உள்ளே வைத்திருக்கும் இடம். அதிகாரம் கொண்ட தலை என்பதற்கு பொருத்தமான பெயர் அது. தமிழின் அருமைஅயன சொல்லாட்சிகளில் ஒன்று. அந்த மத்தகம் தாழ்ந்து இன்னொன்றை ஏற்பதன் அந்தக் கணமே அந்நாவல்
ஜெ http://jeyamohan.in/?p=927


4 comments: