முடிவிலிகளின் இடைக்கிடக்கும்
காலத்தின் ஒரு தூய புள்ளியில்
நிகழ்ந்த சந்திப்பு
பெயர்தெரியா மரத்தின் கிளையில்
பேசி இருந்தது வனக் குருவி
தன இனத்தின்
எப்போதைக்குமான
ஒரே மொழியின் சொற்களை
மானுட பாசைகளின் சொற்கள்
அவிந்து மிஞ்சிய
மெளனத்தில்
மீண்டும் ஒருமொழி துவங்கினால்
புரியக் கூடும்
No comments:
Post a Comment