Tuesday, August 2, 2011

இழந்த சொற்கள்



முடிவிலிகளின் இடைக்கிடக்கும்
காலத்தின் ஒரு தூய புள்ளியில் 
நிகழ்ந்த சந்திப்பு

பெயர்தெரியா மரத்தின் கிளையில்
பேசி இருந்தது வனக் குருவி 
தன இனத்தின்
எப்போதைக்குமான 
ஒரே மொழியின் சொற்களை

மானுட பாசைகளின் சொற்கள்  
அவிந்து மிஞ்சிய 
மெளனத்தில் 
மீண்டும் ஒருமொழி துவங்கினால்
புரியக் கூடும்

No comments:

Post a Comment